-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

வடகொரியாவின் ஏவுகணைகள் கண்காணிப்பதற்காக, ஜப்பான், உளவு செயற்கைக் கோள்


வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களைக் கண்காணிப்பதற்காக, ஜப்பான், உளவு செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது


வடகொரியா மீதான தென்கொரியா மற்றும் ஜப்பானின் சந்தேகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடோ பதவியேற்றவுடன், இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்த முயலும்படி வடகொரியா கோரிக்கை விடுத்தது. அதை ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. வடகொரியாவின் அணுஆயுத உற்பத்தி மீது அமெரிக்கா, ஜப்பானின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கடந்த 22ம்தேதி, ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, எச் - 2ஏ என்ற உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது. மொத்தம், 470 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆக., 28ம் தேதியே விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. சூறாவளி தாக்குதல் இருந்ததால், மூன்று முறை ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் கடந்த வாரம் ஏவப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.

DO You Need Web Site?