உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, அதற்கு என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. அதில் உலக வங்கியின் தலைவர்
ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,
உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.
வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,
உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.
வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.