பாப் பாடகி ஷகீரா கையில் வைத்திருந்த செல்போனை மீன் என நினைத்து கடல் சிங்கம் அவர் மீது பாய்ந்தது. இதில் காயத்தோடு அவர் தப்பினார்.
கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகீரா (35).
விடுமுறையை கழிப்பதற்காக தென்ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகருக்கு தனது சகோதரர் டோனி மற்றும் சில நண்பர்களுடன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.
விடுமுறையை கழிப்பதற்காக தென்ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகருக்கு தனது சகோதரர் டோனி மற்றும் சில நண்பர்களுடன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.
இவர் அங்குள்ள கடற்கரையில் கடல் சிங்கங்கள், சீல்களை ரசித்து கொண்டிருந்தார். கையில் வைத்திருந்த பிளாக்பெரி செல்போனில் கடல் சிங்கங்களை படம் பிடிக்க அருகில் சென்றார்.
அப்போது திடீரென ஒரு கடல் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடிக்க வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து சிலையாக நின்றார் ஷகீரா. அவரை சகோதரர் டோனி பிடித்து இழுத்து கடல் சிங்கத்திடம் இருந்து காப்பாற்றினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேஸ்புக்கில் எழுதியுள்ள ஷகீரா கடல் சிங்கம் தாக்கிய சம்பவத்தின் படங்களையும் அதில் வெளியிட்டு உள்ளார். ‘எனது கையில் வைத்திருந்த அலைபேசியினை மீன் என்று கடல்சிங்கம் நினைத்துள்ளது.
மேலும் இரையை வைத்துக் கொண்டு ஏமாற்றுவதாக நினைத்து என் மீது பாய்ந்தது. இதை பார்த்து எல்லோரும் அலறினார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனது சகோதரர் என்னை காப்பாற்றினார். ஓய்வை கழிக்க சென்ற நாள் அதிர்ச்சியாக அமைந்து விட்டது’ என்றார்.