செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டு தோல்வி கண்ட விண்கலமான புரோபொஸ் இரண்டு சனிக்கிழமை பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது.
ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் நூற்றுக்கணக்கான
மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் இந்த விண்கலம் எச்சமயமும் எமது வளிமண்டலத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறலாம் என நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் இந்த விண்கலம் எச்சமயமும் எமது வளிமண்டலத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறலாம் என நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இதன்பிரகாரம் 200 கிலோகிராம் நிறையுடைய மேற்படி விண்கலம் 2030 துண்டுகளாக வெடித்துச் சிதறி பூமியின் மேற்பரப்பை வந்தடையவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு இந்த விண்கல சிதைவுகள் பூமியை வந்தடையலாம் என நிபுணர்கள் சனிக்கிழமை எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
எனினும் இந்த விண்கல் சிதைவுகள் பூமியின் எப்பகுதியில் விழும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.