-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்

நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வு குழு
பேராசிரியர் பீட்டர் ஓ மெரா குறிப்பிடுகையில், வெளியே 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறைந்தால், அடுத்த 10 நிமிடங்களில் வெப்பம் இரு மடங்காக உயரும்.

கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம். 

நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை, செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு. கடந்த ஓராண்டில் மட்டும் காருக்குள் வெப்பத்தில் சிக்கிய 1,500 குழந்தைகள் அவுஸ்திரேலியாவில் மீட்கப்பட்டனர். 

வெப்பமான காருக்குள் சிக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக உடலில் நீர் வற்றி போய் மூளை பாதிக்கப்படும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு விரைவாக சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சீர்கெடும். நீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது. 

இதை தவிர்க்க சூடேறிய காருக்குள் இருந்து வண்டி நின்றதும் குழந்தைகளை உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்படும் கார் கதவுகளை பூட்டி குழந்தைகள் ஏறி அமராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

DO You Need Web Site?