அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவை சேர்ந்தவர் சாரா மெகின்லி(18). புற்றுநோயால் அவதிப்பட்ட இவரது கணவர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மரணம் அடைந்தார்.
சாராவுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அவர் தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஜஸ்டின் மார்டின் தனது கூட்டாளி டஸ்டின் ஸ்டீவார்ட்(29) என்பவனுடன் வீட்டிற்குள் புகுந்தான்.
பின்னர் சாராவை கொலை செய்ய கத்தியுடன் பாய்ந்தான். உடனே சுதாரித்து கொண்டு சாரா தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவனை நோக்கி சரமாரியாக சுட்டதில் அவன் உயிரிழந்தான்.
டஸ்டின் ஸ்டீவார்ட் தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து சாராவிடம் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர் தன்னையும், குழந்தையையும் காப்பாற்றி கொள்ள தற்காப்புக்காக சாரா சுட்டதாக காவல்துறையினர் கருதினர்.
எனவே அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர். அதே நேரத்தில் தப்பி ஓடிய டஸ்டின் ஸ்டீவார்ட் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தான். இவன் ஒரு கொலையாளி, இவன் மீது 215 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.