இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதி செயற்கை முறையில் இரு குழந்தைகளை பெற்றெடுக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரே நேரத்தில் 5 கருமுட்டைகளை மருத்துவர்கள் உருவாக்கினார்கள்.
இதில் 2 கருவை தாய்க்கு செலுத்தி கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீதியிருந்த 3 கருவையும் தேவைப்படும் போது பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறி குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைத்தனர்.
தற்போது அந்த பெண் குழந்தை பள்ளிக்கூடம் செல்கிறது. இந்நிலையில் மீண்டும் குழந்தையை பெற தம்பதி விரும்பியதால் ஏற்கனவே பாதுகாத்து வைத்த கருவை தாய்க்கு பயன்படுத்தி கடந்த நவம்பரில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ”இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது” என தம்பதியினர் கூறினர்.