கோடானுகோடி பசித்திருக்கும்போது
தனித்திருந்து உண்ணுவது ஐயகோ !
மனிதரே இதுவல்லவோ கொடுமை ..
உணவு உண்ண மனமில்லையே!
ஒரு கவளம் சோறும் இறங்கவில்லையே!
தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
என்றாரே பாரதி - இன்று
கோடானு கோடி மனிதருக்கு உணவில்லையே -எத்தனை
உலகங்களை அழிப்பது
கொரோனவே உனக்கிருக்கும் சக்தி
இங்கு யாருக்குமில்லையே
என்செய்ய ....என்செய்ய ...
எனக்கொரு வாய்ப்பிருந்தால் ...
வாழவைப்பேன் என் இந்திய தேசத்தை ....
திருவாளன் எவனுமின்றி ... தெருவோரம் எவருமின்றி ...
பசித்திருக்கும் வயிறுகளின்றி... கலக்கியிருப்பார் எவருமின்றி ...
ஏழைகள் எவருமின்றி ... ஏமாற்றுவார் எவனுமின்றி ...
பிச்சையிடுவார் தேவையின்றி பிடுங்கித் திண்போன் ஒருவனுமின்றி
உழைப்போர் குரல் ஓங்கி ஒலிக்க
மகிழ்ச்சியில் மக்கள் மகிழ்ந்து நிற்க்க ...
சான்றிதழில் ஜாதி நீக்கி ..
மனங்களில் பிடித்திருக்கும் மதம் நீக்கி
பேதைமை ஒழித்து, மேதமை பொங்க மக்கள் நாட்டிலும்
பெண்ணடிமை அழித்து பெருமை பொங்க பெண்கள் வீட்டிலும்
இமயம் முதல் குமரி வரை எவரும் உறவினர்களாய்
பாலை நிலம் முதல் சோலை நிலம் வரை எவரும் சகோதரர்களாய்
அதிகாரிகள் மக்களின் ஏவலர்களாய்,
காவல்காரர்கள் மக்களின் காவலர்களாய்,
ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாய்,
அனைவரும் இந்தியர்களாய்... உலகில் சிறப்புற நின்று
அறிஞர்களாய் ஆனால்
உலகின் வேலைக்காரர்களாய் திரிபவர்களை
தீப்பந்துகளாக்கி... தொழில் புரட்சியின் தூண்களாக்கி...
இயற்கை விவசாயத்தை இந்தியாவின் இதயமாக்கி ...
இந்திய இளைஞ்சர்களை புதிய ஜனநாயகத்தின் விதைகளாக்கி
உலகின் வல்லரசாக அல்ல நல்லரசாக மாற்றியமைப்பேன்
ஒவ்வொரு இந்தியரின் கனவு தேசத்தை மீட்டெடுப்பேன் .....
இந்தியன் இந்தியன் என்று கொடியசைப்பேன் ......
வாழ்க இந்தியா.... வாழ்க உண்மை ஜனநாயகம் ....
தனித்திருந்து உண்ணுவது ஐயகோ !
மனிதரே இதுவல்லவோ கொடுமை ..
உணவு உண்ண மனமில்லையே!
ஒரு கவளம் சோறும் இறங்கவில்லையே!
தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
என்றாரே பாரதி - இன்று
கோடானு கோடி மனிதருக்கு உணவில்லையே -எத்தனை
உலகங்களை அழிப்பது
கொரோனவே உனக்கிருக்கும் சக்தி
இங்கு யாருக்குமில்லையே
என்செய்ய ....என்செய்ய ...
எனக்கொரு வாய்ப்பிருந்தால் ...
வாழவைப்பேன் என் இந்திய தேசத்தை ....
திருவாளன் எவனுமின்றி ... தெருவோரம் எவருமின்றி ...
பசித்திருக்கும் வயிறுகளின்றி... கலக்கியிருப்பார் எவருமின்றி ...
ஏழைகள் எவருமின்றி ... ஏமாற்றுவார் எவனுமின்றி ...
பிச்சையிடுவார் தேவையின்றி பிடுங்கித் திண்போன் ஒருவனுமின்றி
உழைப்போர் குரல் ஓங்கி ஒலிக்க
மகிழ்ச்சியில் மக்கள் மகிழ்ந்து நிற்க்க ...
சான்றிதழில் ஜாதி நீக்கி ..
மனங்களில் பிடித்திருக்கும் மதம் நீக்கி
பேதைமை ஒழித்து, மேதமை பொங்க மக்கள் நாட்டிலும்
பெண்ணடிமை அழித்து பெருமை பொங்க பெண்கள் வீட்டிலும்
இமயம் முதல் குமரி வரை எவரும் உறவினர்களாய்
பாலை நிலம் முதல் சோலை நிலம் வரை எவரும் சகோதரர்களாய்
அதிகாரிகள் மக்களின் ஏவலர்களாய்,
காவல்காரர்கள் மக்களின் காவலர்களாய்,
ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாய்,
அனைவரும் இந்தியர்களாய்... உலகில் சிறப்புற நின்று
அறிஞர்களாய் ஆனால்
உலகின் வேலைக்காரர்களாய் திரிபவர்களை
தீப்பந்துகளாக்கி... தொழில் புரட்சியின் தூண்களாக்கி...
இயற்கை விவசாயத்தை இந்தியாவின் இதயமாக்கி ...
இந்திய இளைஞ்சர்களை புதிய ஜனநாயகத்தின் விதைகளாக்கி
உலகின் வல்லரசாக அல்ல நல்லரசாக மாற்றியமைப்பேன்
ஒவ்வொரு இந்தியரின் கனவு தேசத்தை மீட்டெடுப்பேன் .....
இந்தியன் இந்தியன் என்று கொடியசைப்பேன் ......
வாழ்க இந்தியா.... வாழ்க உண்மை ஜனநாயகம் ....
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.