பனிக்கட்டிகளை பயன்படுத்தி பல வகையான சிற்பங்களை படைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன தேசத்தவர்கள் சற்று ஒரு படி மேலே போய் அச்சிற்பங்களுக்கு ஔியால் மெருகூட்டி மேலும் கவர்ச்சி சேர்த்துள்ளனர்.
இது இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். அதாவது 2008ம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைவரையும் கவர்ந்த அம்சமாக காணப்பட்டன.
இன்றும் சீனர்கள் தமக்கு பெருமை சேர்த்த அந்தக்கலையை தொடர்ந்து பேணிவருகின்றனர். அதன் விளைவாக பெய்யிங்கில் நடைபெற்ற சந்திர புதுவருடத்தின் இறுதி நிகழ்ச்சிகளில் அவ்வாறான சிற்பங்களை உருவாக்கி ஔியூட்டி மகிழ்ந்த காட்சிகளே இவை.