மனிதன் முறையாக தூங்கி எழுந்தால் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தினமும் நேரத்திற்கு அயர்ந்து தூங்கி ஓய்வு எடுங்கள் என விஞ்ஞானிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.