4500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த எலும்புகளை ஆய்வாளர்கள் வான்கூவர் தீவின் எல்லை பகுதியில் உள்ள நமு தீவில் கண்டுபிடித்தனர். அதனை பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹெய்ட் சக் பர்ஸ்ட் நேஷன் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
சைமோன் பிரேசர் பல்கலைக்கழகம் தொல்லியல் ஆய்வாளர் ராய் கார்ல்சன் மற்றும் ஹெய்ட் ஸ்விக் பர்ஸ் நேஷன் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். கடந்த 1977ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டும் முயற்சி தொடங்கியது. அவை மீண்டும் கொண்டு வரப்பட்டது குறித்து ஹெய்ட்சக் தலைவர் ஹார்வி ஹம்சிட் பெருமிதம் அடைந்தார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் எங்களது முன்னோர்களின் எலும்புகள் தாய் பூமிக்கு வந்துள்ளது என அவர் தெரிவித்தார். ஆய்வாளர்களின் தற்போதய ஆய்வில் 142 முன்னோர்களின் உடல் எலும்புகள் சேகரிக்கப்பட்டு தாய் மண் திரும்பி உள்ளது. அந்த எலும்பு பகுதி வைக்கும் இடத்தில், அந்த முன்னோர்களுக்கு பயணத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பலகையில் எழுதி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.