எந்த பதவியிலும் இல்லாத எனக்கே இது தோன்றும்போது பக்கம் பக்கமாக தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் பெரிய கட்சிகளின் முதலாளிகளுக்கு ஏன் இது தோன்றவில்லை,
சாப்பிடுவது ஏழைகள் தானே என்ற இளக்காரமா?
இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் உங்களால் மக்களுக்கு ஏன் நல்ல உணவுப் பொருட்களை வழங்க முடியவில்லை
அமைச்சர்களில் இருந்து அள்ளிப் போடுபவர் வரை எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
உணவு விநியோக துறையில் ஊழலை ஒழிக்க ஏன் எவருமே முன்வருவது இல்லை.
எப்படி நல்ல பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும்?
உண்மையாய் மக்களுக்காக உழைப்பவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டாமா?
ஏன் முதலீடு போட்டு லாபம் பார்க்கும் அவர்களையே ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கிறீர்கள்? அதன் பின்பு அழுது வடிக்கிரீர்கள்?
தேர்தல் வந்தால் மட்டுமே மக்களிடம் வரும் இவர்களை துரத்த வேண்டாமா?
சிறிய தீ ஓர் நாள் பெரு நெருப்பாகும். நாட்டில் நிலவும் அவல நிலையை கண்டு வெதும்பும் நீங்கள் அனைவரும் சேர்ந்தால் ஓர்நாள் கண்டிப்பாக மாற்றம் உருவாகும்
சமூகத்திற்காக உழைப்பவர்கள் மக்களுக்காக முன் நிற்க வேண்டுமல்லவா?
உணவளிக்க ஒன்றுதிரண்டு நின்ற மனிதர்கள் கையேந்தும் அவல நிலையை ஒழிக்க கரம் கோர்க்க வேண்டுமல்லவா?
அடுத்த தலைமுறைக்கு ஊழல் அற்ற, பசியற்ற, சுரண்டல் அற்ற, பொருளாதார சம நிலை உள்ள இந்தியாவை தூய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இது பற்றி தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடவும். நன்றி
மக்கள் பணியில்
ஜெய செல்வன்