-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

ஜல்லிக்கட்டுப் போராட்டம் - காந்திய காளைகளின் அமைதிப் புரட்ச்சி

இந்தியாவில் காந்தியம் இல்லாமல் போனதோ!  பணத்தில்  மட்டும்தான் அவர் இருப்பாரோ! காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய்விட்டதோ! என அப்பாவி மக்களும் அறவழி விரும்பும்  கோடானு கோடி மக்களும் வருந்தி  இருந்த நேரத்தில் இல்லை இல்லை காந்தி தோற்க மாட்டார் அறவழி அழியாது
  என்று மறவழி வந்த எங்கள் தமிழ்மக்கள் மாண்புமிக்க ஒழுங்குடன், வீரமுடன், நெஞ்சுறுதியுடன், நாகரீக இறுமாப்புடன் களம் காண்கிறார்கள்! ஆம் மக்களே! இவர்கள்தான் காந்தியின் வாரிசுகள்! புதிய போராட்ட நதிகளின் பிறப்பிடங்கள்! திராவிட நாகரீகத்தின் மாண்பினை காக்கும் அழியா சிறப்பிகள்! வெள்ளையர்களிடம் வாங்கிய சுதந்திரத்தை கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்போகும் நிஜப்போராளிகள் !

இளைஞர்களே! இது உங்கள் நேரம்! உங்கள் குரலை உயர்த்தவும் இந்த இந்திய தேசத்தின் கோணல்களை நிமிர்த்தவும் களம் உங்கள் முன்னே காத்துக் கிடக்கிறது. நீங்கள் நினைத்தால் உண்மையான, ஊழலற்ற, அனைவருக்கும் நல்ல உணவு, உடை, வீடு, அனைவருக்கும் வேலை, சரிசமமான உரிமை, மக்களுக்கான அரசாங்கம் என நிஜத்தில் நடத்திக் காட்ட முடியும்! எங்களின் போராட்டம் தமிழனின் தலை நிமிர்த்தும் போராட்டம் மட்டுமல்ல இந்தியாவின் தலை விதியையே மாற்றும் புரட்ச்சி என்று உலகிட்கு உணர்த்த முடியும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதி. இந்தியாவில் எத்தனை கோடி ஜனங்களுக்கு உணவில்லை எத்தனை விவசாயிகள் தற்கொலை   வீதியிலிறங்கி போராடியும் விளையாட்டு உரிமையை கூட கொடுக்க மறுக்கிறார்களே! யாரிடம் கேட்க வேண்டும் உன் உரிமையை? எவன் கொடுக்க வேண்டும் உனக்குச் சலுகையை? கடற்கரை வாசம் பூண்ட காளைகளே மீட்டு வாருங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை...  உறக்கச் சொல்லுங்கள் உங்களை உரிமையை ... உடைத்தெறியுங்கள் ஜல்லிக்கட்டுடன் உங்கள் வாழ்வோடு மல்லுக்கட்டும் ஏமாற்றுவாதிகளின் அனைத்துத் தடைகளையும் ...வாடி வாசலுக்கு மட்டுமல்ல மக்களின் எதிர்கால வாழ்க்கை வாசலுக்கும் தடை நீக்கப்பட வேண்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? வாழ்க உங்கள் அறவழி போராட்டம்! தொடர்க உங்கள் அரசியல் தேரோட்டம்

ஜெயசெல்வன்
ஆசிரியர்
தமிழுலகம்

DO You Need Web Site?