அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான
ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.
நாம் உண் ணும் உணவு
செரி மானம் அடைவ தற்கு
வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில்
இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம்
சுரக்கும் போது, இது வயிற்
றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம்,
பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய
காரணங்களாகும்.
குடும்ப
விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப்
ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில்
காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ
நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந்
தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும்.
இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட்
எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் இதைத் தடுக்க வேறு
இயற்கை முறைகள் உண்டு என்பது
பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான
10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு
பார்க்கலாம்.
1.வாழைப்பழம்
:
வாழைப்பழத்தில்
அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை
உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு,
குறைவான அமிலத் தன்மை ஆகிய
காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று
மருந்தாகும்.
மேலும்
இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை
ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன.
இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக்
குறைக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை
விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி
ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப்
பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம்.
மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம்
அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
2.துளசி
:
துளசியில்
இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள
வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை
ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும்
ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின்
சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை
வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு
சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது
ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
3.குளிர்ச்சியான
பால் :
பாலில்
அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு
டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக்
குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த
தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக்
கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை,
சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக
அதில் ஒரு கரண்டி நெய்
சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
4.சோம்பு
:
இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது
வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ
குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி,
செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு
பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக்
அமிலம் மற்றும் வேறுபல கூறுகள்
இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும்
சக்தி வாய்ந்தது.
இதைத் தவிர, இது வயிற்றின்
உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது.
ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட
பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு
வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால்,
கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க
வைத்து, அதை இரவு முழுவதும்
ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால்
அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
5.சீரகம்
:
சீரகத்தில்
அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும்
தன்மை உள்ளது. இது செரிமானத்தை
சீராக நடை பெற வைத்து,
அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை
சரிசெய்யும். அது மட்டுமின்றி இது
வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும்
புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத
முறையில் கூறப்படுகிறது.
அதற்கு
இதை வாயில் போட்டு மென்று
சாப்பிடலாம். அதை விட, நீரில்
கொதிக்க வைத்து, ஆறிய பின்னர்
அந்த நீரைக் குடிப்பது சிறந்த
முறையாகும்.
6.கராம்பு
:
இது ஒரு இயற்கை யான
இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும்.
இது குடல் தசை இயக்
கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ்
நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.
இதன் ஒரு வகையான கசப்புக்
கலந்த காரமான சுவை, அதிகளவு
உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும்
போது, ஒரு கிராம்பை கடித்து
வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி
நிவாரணம் அளிக்கும்.
7.ஏலக்காய்
:
சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று
தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய
ஒரே உணவு ஏலக்காய் என
ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி,
வயிற்று வலியைக் குறைக்கும்.
இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி,
வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால்
ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும்
குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின்
மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி,
நீரில் கொதிக்க வைத்து, ஆறிய
பின்னர் அந்த நீரைக் குடித்தால்,
உடனடி நிவாரணம் கிடைக்கும்.
8.புதினா
:
புதினா
இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும்
பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு
நிவாரணம் தரும் ஒரு சிறந்த
மருந்தாகவும் பயன்படுகிறது.
இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி
மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை
அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக்
கசக்கி, நீரில் கொதிக்க வைத்து,
ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால்
நிவாரணம் கிடைக்கும்.
9.இஞ்சி
:
இந்தியாவில்
பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி.
இது உணவை உறிஞ்சும் தன்மையை
அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு
வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச்
சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு
உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம்
சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத்
தாக்கத்தைக் குறைக்கிறது.
வேண்டுமெனில்
சிறிய இஞ்சித் துண்டை மென்று
சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால்,
நீரில் கொதிக்க வைத்து, அந்த
நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம்
வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால்,
இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச்
சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
10.நெல்லிக்காய்
:
இதில் அதிகளவு வைட்டமின் `சி'
உள்ளது. இதைத் தவிர சளி
மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன்
நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன்
இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க
உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய்
பவுடரை, தினமும் இரண்டு வேளை
சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது,
ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு
வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு
வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல
நிவாரணம் பெறுங்கள்.