வானிலுள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிவதில்லை.
இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.
புதன், வௌ்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களே இவ்வாறு ஒரே இரவில் தோற்றமளிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்நிகழ்வானது அனேகமாக பெப்ரவரி 22 தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுள் வௌ்ளி கிரகத்தை வெற்றுக்கண்ணின் ஊடாக நாள் தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரையும், சனி செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாது சூரியன் உதித்து மறையும் காலப்பகுதியில் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?