வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த செயற்கை எலும்புகளை உடலில் தேவையான பகுதியில் வைத்தால்
அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வை 4 வருடங்களாக நடத்தியுள்ளனர். பிளாஸ்ரிக் துகள்களைப் படிப்படியாக உருவாக்கி அது காயும் நிலைக்கு வந்ததும் சுத்தப்படுத்திப் பின்னர் 1250 செல்சியசில் பயன்படுத்துகின்றனர்.
இதனை முயல்கள் மற்றும் எலிகளைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்து பார்த்ததாக வைத்தியர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் எந்தவிதமான உடல்நல கேடுகளையும் விளைவிக்காது என்றும் அமெரிக்க வைத்தியக்குழுவினர் நம்புகின்றனர்.