சமீபத்தில் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதில் ஆப்கான் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும். தற்போது அதற்கான செயல்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆப்கான் ராணுவத்திற்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சி முறைகள் இறுதி வடிவம் பெற்றுள்ளன. டேராடூனில் உள்ள சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளி மற்றும் சென்னை, கயாவில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ராணுவ தளவாடங்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்ற தகவலும் வெளி வந்துள்ளன.
முன்னதாக ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள வீரர்களுக்கு இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி அளித்த போது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி இடையூறு செய்ததால் தற்போது அவர்கள் இந்தியா வந்து பயிற்சி எடுக்கவுள்ளனர்.